Friday, August 04, 2006

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் - 6




நீர் ஓர் தமிழ்க்கடல், குரல் களஞ்சியம்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு
அதிநுட்பம் யாவுள முன் நிற்பவை”....
-குறள்

தமிழ்நாட்டு வான்அலைகளை கற்கண்டு அலைகளாக மாற்றிக்கொண்டிருக்கும் யாழினினை குரலாக உடைய

யாழ்ப்பாணத்து (யாழ்)சுதாகர் அவர்களுக்கு....

உங்கள் அன்பு தமிழ் ரசிகன் எழுதும்மடல்.

நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி அருமையிலும்அருமை. உங்களின் நிகழ்ச்சி தொகுப்புத்தோரணம்,…புகழ வார்த்தைகளே இல்லை.

ஆங்கிலத்தைப் போல் தமிழையும் ஸ்டைலாக பேசமுடியும் என்பதை உங்கள்மூலம் தெரிந்து கொண்டேன்.

வானத்து மேகங்களை காகிதமாக்கி நீலவானத்தை மையாக கொண்டு உங்கள் தமிழ்புலமையை புகழ்ந்தால்கூட அது வற்றிப் போகும்.

நீர் ஓர் தமிழ்க்கடல்,
குரல் களஞ்சியம்,

கேட்க ஆயிரம் காதுகள்வேண்டும். தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா தொலைக்காட்சிகள், வானொலிகள் இருந்தும் உங்களின் (தமிழீழ தமிழர்கள்) பேச்சுத்திறமைக்கு ஈடாகமுடியாது.

4 ½ கோடிதமிழர்கள்வாழும்தமிழ்நாட்டில்...கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல்ஹமீத் ஆகியோருக்கு இணையாக யாரும் இல்லை என்பது வேதனைக்குரிய செய்தி.

செத்தவன் கையில் வெற்றிலை பாக்கை கொடுத்ததைப்போல் தமிழை பேசி கெடுக்கும் தமிழ் அறிவிப்பாளர்கள் மத்தியில்...நீர் ஓர்விடிவெள்ளி!

தமிழ் வானை வலம் வரும் முழுநிலா.

வாழ்கநின்புகழ்!

வளரட்டும் நின் தமிழ்தொண்டு!!

“சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் இன்மை அறிந்து -”குறள்“

இத்துடன் உனது கணக்கை முடிக்கப்போகிறேன்என்று இறைவன் என்னிடம் கூறினால்...

நான் வரம் ஒன்று அவனிடம் கேட்பேன்.

இறைவா எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை ஈழத்தில் பிறக்கவை.

அப்போதுதான் ....யாழ் சுதாகர் போன்றவர்களின் குரலைக்கேட்பதற்கும்.. .தமிழை தமிழாக பேசுவதற்கும் வாய்ப்பினைப்பெறுவேன்.”

-ஆ .செல்வராயர்,திண்டிவனம்


---- ----- -----




'யாழ் சுதாகர்' குரலில்

ஒலிப்பதிவு செய்யப்பட்ட

கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில் பெற விரும்பினால்....

ungalrasigan@yahoo.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்.....

உடன் அனுப்பி வைக்கிறோம். [ By E - Mail]

phone-9841985537

No comments: