Thursday, August 03, 2006

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் -3




அமுதும் தேனும் எதற்கு?

எங்கள் அண்ணன் யாழ் சுதாகர் இருக்கையிலே எனக்கு!!

அமுத கானங்களை.... தேனினும் இனிய சுவை உடைய அழகு தமிழில் காற்றலைகளின் மூலம் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான நேயர்களின் எண்ண அலைகளோடு அன்புடன் உறவாடும் அண்ணன் யாழ் சுதாகர் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

பாட்டுக்கொரு தென்றல் திரு. ஏ.எம். ராஜா அவர்களின் தொகுப்பையும், இசைமணி திரு. சீர்காழி கோவிந்தராஜனின் தொகுப்பையும் கேட்டு பரவசம் அடைந்தேன்.

இன்னும் பாராட்டுவதற்கு வார்த்தைகளைத் தேடித் தேடி கடைசியில் எனக்குத் தெரிந்த வார்த்தை இதுதான். “தங்கள் நிகழ்ச்சிகளைக் கேட்குமாறு என்னை மனிதனாகப் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

பிறவிப் பயனை நான் முழுமையாக அடைந்து விட்டேன்.

” 14-02-06 அன்று அதிகாலை 5.00 மணிக்கு ஒலிப்பரப்பான பாட்டுக்கொரு தென்றல் திரு. ஏ.எம். ராஜா, ஜிக்கி இணைந்து பாடிய “செந்தாமரையே” என்ற பாடலைக் கேட்டு என் உயிர் உருகி ....

“ராசி நல்ல ராசி” என்ற பாடலுக்கு உயிர்த்தெழுந்து...

“முத்தாரமே” என்ற பாடலைக் கேட்டு மீண்டும் உயிர் உருகி.. உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்.... மனக் கண்களில் நான் அண்ணன் யாழ் சுதாகரைக் காண்கிறேன் என்று கூறி பாடல்களை ஒலிக்கச் செய்த தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியை தங்களின் பொற் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

-லால்குடி ஆர்.திருமுருகன் , சென்னை - 42



யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...
[TO LISTEN TAMIL OLD SONGS] இங்கே சொடுக்குங்கள்
.

YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR,
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

No comments: