Thursday, August 03, 2006

இந்திய நேயர்கள் எழுதிய கடிதங்கள் - 4

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

அன்பான யாழ் அவர்களே…..

தீபாவளி…. நல்வாழ்த்துக்கள்.

29-10-05 சனிக்கிழமை இரவு 3.00 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியில்… பழைய காலத்து பாடல்களும்…. பதிவான முறைகளும் அதற்கான அர்த்தங்களோடு…. எங்களை எல்லாம் மகிழ்வித்த… நீங்கள்.. [ நீ சொல்லாவிட்டால்… வேறு யார் சொல்வார்கள்… யாழ் ?….. ] அத்தனையும் அருமை…

மயில்வாகனனை நினைவு கூர்ந்தது….. அத்தனையும் மிஞ்சும் அருமை.

ஏனென்றால் உங்களது குரல்வளம் அவரைப்போலவே இருக்கும். நான் முதலில் கேட்டு ரசித்த உங்களது குரல் அவர் என்றுதான் முதலில் நினைத்தேன். .

இரவை கூட பகலாக்கி… எங்களை … சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் யாழ் அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

-பி.ஜி.கெனி, அணைக்கரை

No comments: